100 கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடங்களில் பதிலளிக்கும் 3ஆம் ஆண்டு சாதனை மாணவன் றிசோனுக்கு கௌரவம்!



 (வி.ரி.சகாதேவராஜா)


பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் பதிலளிக்கும் 
மட்/தாழங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 3ம் ஆண்டில் கல்விகற்கும் சாதனை மாணவன் றிசோன் ரோபட் கௌரவிக்கப்பட்டார்.

அதற்காக சாதனை மாணவன் றிசோன் ரோபட்டுக்கு சோழன் உலக சாதனை விருது வழங்கப்பட்டது.


இவர் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா மற்றும் செயற் குழு உறுப்பினர் கவிஞர் அ. தனுராஜ் ஆகியோர் முன்னிலையில் இச் சாதனையை படைத்துள்ளார். 

3ம் ஆண்டில் கல்விகற்கும் மாணவனான இவர் மட்டக்களப்பு தாளங்குடாவைச் சேர்ந்த ரோபட் ஞானமலர் ஆகியோரின் புத்திரராவார்.


இவரை பாராட்டி கௌரவித்து விருதுகளும், சான்றிதழ்களும்,பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு  சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அருட்தந்தை நவாஜி நவரெட்ணம்,அருட்ந்தை மார்சல் மற்றும் அருட்தந்தை கள் அன்பு,சுகந்தன்,அருட்சகோதரி தவசீலா  மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.