அக்கரைப்பற்றில் நிகழ்ந்த விபத்தில், கடுங்காயமுற்றவர் மட்டக்களப்புக்கு மாற்றம்





இச் செய்தி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி அம்மா முதலியார் வீதி சந்திக்கும் இடத்தில் இன்று மாலை விபத்து  இடம்பெற்றுள்ளது.

 மிக வேகமாக செலுத்திய கார்-சாரதி முச்சக்கர வண்டியில்  மோதுண்டதால், குறித்த முச்சக்கர வண்டிச் சாரதி கடுங்காயமுற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அவசர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

தற்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக, கடுங்காயமுற்றவர்,  மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த காரைச் செலுத்திய சாரதி, இம்முறை  சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாகவும் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்தி வந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

அக்கரைப்பற்று பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.