பிரித்தானிய பிரதி பிரதமர்,இலங்கையில்



 


பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லாமி இன்று (17) காலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.


இந்த விஜயத்தின்போது, ​​பிரதிப் பிரதமர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவும், கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரித்தானியா ஆதரவை வழங்கும் மனிதாபிமான உதவி கூட்டாளர்களுடன் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.