மின்சாரம், எரிபொருள் சிக்கனம் அவசியம்: அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர்



 

நூருல் ஹுதா உமர்

தற்போதைய பொருளாதார சூழ்நிலையை முன்னிட்டு, மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனமாகக் கடைப்பிடிக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, வளங்கள் வீணாகாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்த விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சபையின் நிதிச் சுமையையும் குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைத்து வைக்க வேண்டும். இயற்கை வெளிச்சத்தை அதிகப்படியாகப் பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைக்கும் பழக்கத்தை உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.