எஹெலியகொட நகரில் காரொன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரில் பயணித்த காரொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் என மொத்தமாக ஆறு வாகனங்கள் மீது மோதியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment