விராட் கோலி - ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 9வது சத்தை நிறைவு செய்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். 193 என்ற இலக்கைத் துரத்திய ஆர்சிபி, கோலியின் இந்த சதத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால், 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கும் முன்னேறியிருக்கிறது.
கோலியின் இந்த இன்னிங்ஸ் வந்த சூழ்நிலை சற்று சவாலானதுதான். முந்தைய 2 போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆகியிருந்தார். அதனால், அவர் முதல் ரன் எடுத்தபோதே பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. அவரே கூட அந்த ரன்னைக் கொண்டாடினார். அப்படி பெருமளவு பேசப்பட்ட இரு டக் அவுட்களுக்குப் பிறகு இப்படியொரு இன்னிங்ஸைக் கொடுத்திருக்கிறார் கோலி.
இந்த சேஸை ஆரம்பத்தில் இருந்தே தன் கட்டுக்குள் வைத்திருந்தார் விராட். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பௌலர்களால் எந்த சூழ்நிலையிலும் சவால் கொடுக்கவே முடியவில்லை. அனுகூல் ராய் பந்துவீச்சில் நேராக அடித்த சிக்ஸர், கார்த்திக் தியாகி பந்துவீச்சில் ஃபிளிக் மூலம் அடித்த சிக்ஸர்கள் கோலியின் ஆஸ்தான அழகான ஆட்டத்துக்கான சில உதாரணங்கள்.
இருந்தாலும் நான் கோலியின் ஆட்டத்தில் அதிகம் வியந்து பார்ப்பது அவர் ஆடிய வேகம். ஆரம்பத்திலேயே வைபவ் அரோரா பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்துத் தொடங்கியவர், எந்த இடத்திலும் தன் வேகத்தைக் குறைக்கவில்லை. 175 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி இந்த ஆட்டத்தை முடித்தார் விராட். அதேசமயம், இந்த சீசன் முழுவதுமே.... ஏன், கடந்த சில சீசன்களாகவே அவர் இந்த வேகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார் என்பது மிகவும் முக்கியமான விஷயம்.


Post a Comment
Post a Comment