அக்கரைப்பற்றில் சிறுவர்கள் செலுத்திய கார் விபத்து, இருவர் வைத்தியசாலையில்





 அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று (20) நடந்த ஒரு வாகன விபத்தில் இருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமுற்றவர்கள், அம்பத்துஒய பகுதியினைச் சேர்ந்தவர்கள், கூலி வேலை செய்து விட்டு,வீடு நோக்கிப் புறப்ட்ட போது அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு அருகில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஐந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கார் ஒன்றினை மிக வேகமாக செலுத்தி சென்று  இவர்கள் மீது மோதிவிட்டு விபத்தை ஏற்படுத்தி விட்டு அக்கரைப்பற்று, அம்பாறை வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் 

குறித்த வாகனம் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார் எனத் தெரியவந்துள்ளது குறித்த காரின் உரிமையாளர் தான் எனவும் தானே இந்த வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் ஒருவர் அக்கரைப்பற்று போலீசில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும் இது முற்றிலும் பொய்யானது.எனவும் குறித்த சிறுவர்களே குறித்த காரில் பயணித்திருந்ததாகவும்  நேரில் கண்ட சாட்சிகள் அந்த இடத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கின்றார்கள் 

குறிப்பிட்ட சிறுவர்களை, கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள் அவ்விடத்திற்கு விஜயம் செய்த அக்கரைப்பட்டி போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள் இதனால் அந்த இடத்தில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது


#Akkaraipattu #RoadAccident #SrilankaNews #Justice #PoliceInvestigation #BreakingNews #qknews