Vijayaraja Sugirthakumar
அம்பாறை மாவட்டம் வட்டமடு கொக்குளுவ பகுதியில் யானைத்தாக்குதலில் ஒருவர் பலியானார்.
குறித்த சம்பவம் (23) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலியானவர் அக்கரைப்பற்று மகாசக்தி வீதியை சேர்ந்த 63வயதுடைய கந்தசாமி கணேசமூர்த்தி என தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை பராமரிக்கும் இவர் கொக்குளுவ பகுதிக்கு சென்று கால்நடைகளை பார்த்து விட்டு வருகையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளும் கால்நடை உரிமையாளர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னரும்
பல யானை தாக்குதல் சம்பவம் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment