🔴"முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு"!
இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பம்! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காகச் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இந்த உத்தரவு வந்துள்ளது. எனினும் சி.ஐ.டி அதிகாரிகள் தேடிச் சென்றபோது அவர்கள் வீடுகளில் இல்லை என்பதால் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இந்த வீடியோவில் விரிவாகக் காணுங்கள்.
#tubetamil #tubetamil24x7 #BasilRajapaksa #ArrestOrder #SriLankaPolitics #CIDNews #CorruptionSL #BreakingNewsTamil #JaffnaTamil #LKANews #TravelBanSL #SriLankaNews


Post a Comment
Post a Comment