பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
.webp)

Post a Comment
Post a Comment