லோர்ட்ஸில் வரலாறு படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி



 


லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


அத்துடன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் யாஸ்திகா பாட்டியா படைத்துள்ளார்.


இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 457 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா, இங்கிலாந்தை நான்காவது நாளிலேயே 270 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


இது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியிருந்தது.



'142 ஆண்டுகளுக்குப் பிறகு' - லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி பட மூலாதாரம்,Getty Images

ஆனால், லார்ட்ஸில் நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டி பல்வேறு சாதனைகளுக்காகவும் நினைவுகூரப்படும்.


ஆண்கள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் 1884 ஜூலை 21 முதல் 23 வரை நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.


ஆண்கள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்ற 142 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.


இந்த டெஸ்ட் போட்டியில் யாஸ்திகா பாட்டியா லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனை படைத்தார். அதேபோல், கிராந்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தார்.


Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

ஆரோக்கியம், 12 மணிநேர உண்ணாவிரதம், உபவாசம், உடல் எடை குறைப்பு, உணவுமுறை

தினசரி 12 மணி நேர விரதம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? 6 முக்கிய விஷயங்கள்

வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் விவாதம் நடந்து வருகிறது (கோப்புப் படம்)

வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய கிரிக்கெட் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்படுகிறது?

ரயன்ஏர் விமானம்


'ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி' - விமான பயணிகளின் திகில் அனுபவம்

ஹாலண்ட் நார்வே அணியை முதன்முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்  

'மாட்டின் இதயம், கல்லீரல், தேன்' - நார்வே வீரர் ஹாலாண்டின் உணவு, வாழ்க்கை பற்றிய 5 விஷயங்கள்

End of அதிகம் படிக்கப்பட்டது

யாஸ்திகா பாட்டியா பட மூலாதாரம்,Stu Forster/Getty Images

படக்குறிப்பு,யாஸ்திகா பாட்டியா 14 பவுண்டரிகளின் உதவியுடன் 113 ரன்கள் எடுத்தார்.

யாஸ்திகாவின் அபாரமான ஆட்டம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - படம்

வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்


பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் குவித்தது.


இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா 83 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 58 ரன்களும் எடுத்தனர்.


இதையடுத்து பந்துவீசிய இந்திய அணி அபாரமாக செயல்பட்டு, இங்கிலாந்தை 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. இதன் மூலம் இந்தியா 115 ரன்கள் முன்னிலை பெற்றது.


இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்டரான யாஸ்திகா பாட்டியா சதம் விளாசினார்.


ஞாயிற்றுக்கிழமையன்று யாஸ்திகா தனது இன்னிங்ஸைத் தொடங்கியபோது, அவர் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இங்கிலாந்து பந்துவீச்சாளர் லாரன் பெல் வீசிய பந்து யாஸ்திகாவின் பேட்டின் உள்கோணத்தில் பட்டு விக்கெட்டைத் தாக்கியபோது அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. பெயில்கள் கீழே விழாததால் அவர் ஆட்டமிழக்கவில்லை.


இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட யாஸ்திகா, 6 பவுண்டரிகளுடன் 86 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.


மதிய உணவு இடைவேளையின் போது அவர் 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து, மொத்தம் 365 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.


25 வயதான யாஸ்திகா, மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய முதல் ஓவரிலேயே தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.


12 பவுண்டரிகளுடன் 145 பந்துகளை எதிர்கொண்டு அவர் இந்த மைல்கல்லை எட்டினார். பெவிலியன் பால்கனியில் நின்றிருந்த அவரது சக வீரர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.


வினூ மண்கட், திலீப் வெங்சர்க்கார், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் உட்பட லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் யாஸ்திகா தற்போது இணைந்துள்ளார்.

யாஸ்திகா இறுதியில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சோஃபி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் அவர் ஒரு பெரிய ஷாட் ஆட முயன்றபோது ஆட்டமிழந்தார்.

அவர் பெவிலியன் திரும்பும்போது பல இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் எழுந்து நின்று  அவருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

சோஃபி எக்லெஸ்டோன் பின்னர் சினே ரானாவின் விக்கெட்டை வீழ்த்தி தனது ஐந்து விக்கெட் சாதனையை நிறைவு செய்தார். அவர் 33.3 ஓவர்களில் 118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மகளிர் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முன்னதாக அதே போட்டியில், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட் 17 ஓவர்களில் வெறும் 37 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பட மூலாதாரம்,Getty Images

வினூ மண்கட், திலீப் வெங்சர்க்கார், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் உட்பட லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் யாஸ்திகா தற்போது இணைந்துள்ளார்.


யாஸ்திகா இறுதியில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சோஃபி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் அவர் ஒரு பெரிய ஷாட் ஆட முயன்றபோது ஆட்டமிழந்தார்.