கணித ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டது.



 


கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் திறந்து வைப்பு

நூருல் ஹுதா உமர்


கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனை கல்வி மாவட்ட கணித ஆய்வுகூடம் இன்று (17) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.


பாடசாலை உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸ்ஸானா அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணித ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் ஸ்தாபன மற்றும் பொது நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களும், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் காரைதீவு பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.


விசேட அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் தலில் அபூபக்கர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை பொறியியலாளர் இசட்.ஏ. அஸ்மீர், அல்-மீஸான் பௌண்டேஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர் மற்றும் கல்முனை கல்வி மாவட்டத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த கணிதப் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.


மாணவர்களின் கணிதக் கற்றலை செயன்முறை மற்றும் அனுபவ அடிப்படையிலானதாக மாற்றுவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்த ஆய்வுகூடம், கணிதக் கருத்துக்களை எளிதாக விளங்கிக் கொள்ளவும், மாணவர்களின் பகுத்தறிவு, தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என நிகழ்வில் அதிதிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.


பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


கல்வித் துறையில் புதுமையான கற்றல் வளங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக இக்கணித ஆய்வுகூடம் அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.