பொத்துவில் கடற்பரப்பில் சிக்கிய மீனவர் கடற்படையினரால் மீட்பு



 சீரற்ற வானிலை காரணமாக பொத்துவில் கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகிலிருந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.



இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, கடற்படையின் ‘விஜயபாகு’ கப்பல் மற்றும் படகுகளை பயன்படுத்தி விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது ஆபத்தில் சிக்கியிருந்த மீனவர் மீட்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் கரைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.