கூட்டுப்பணியின் போது மாரடைப்பால் ஆசிரியர் மரணம்!



 


சம்மாந்துறையில் சோகம்: கூட்டுப்பணியின்

போது மாரடைப்பால் ஆசிரியர் மரணம்!


மஜீத்புரம் கிராமத்தில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் பங்கேற்றிருந்த போது நேர்ந்த துயரம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மஜீத்புரம் கிராமத்தில் நேற்று (08) இடம்பெற்ற 'அத்தம' சமூகக் கூட்டுப்பணி நிகழ்வின் போது ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 


மல்வத்தை 3 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணியில் சம்மாந்துறை மஜீத்புரம் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மீரா முகைதீன் தௌபீக் என்பவர் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தார்.


பணியில் ஈடுபட்டிருந்த போதே அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


கிராமத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஒரு சிறந்த ஆசிரியரின் இந்தத் திடீர் மறைவு அப்பகுதி மக்களையும் மாணவர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.