தலைமன்னாரில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அரிய வகை பச்சை ஆமை:



 


🛑தலைமன்னாரில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அரிய வகை பச்சை ஆமை: வனவிலங்கு அதிகாரிகளினால் தீவிர சிகிச்சைக்காக ஏற்பாடு!


​தலைமன்னார் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்காவிற்குட்பட்ட ஓல்ட் பியர் பகுதியில், தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அரிய வகை பெண் பச்சை ஆமை ஒன்று (Chelonia mydas) இன்று மாலை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.


​ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா அதிகாரிகளும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பலனாக இந்த உயிரினம் காப்பாற்றப்பட்டுள்ளது. 


மீட்கப்பட்ட இந்த ஆமை சுமார் 6 அடி 2 அங்குல நீளமும், 5 அடி 4 அங்குல அகலமும் கொண்டதாகும்.(மஜீட் )

​காயமடைந்துள்ள இந்த ஆமைக்குத் தேவையான மேலதிக மருத்துவ சிகிச்சைகளை கிளிநொச்சி வனவிலங்கு கால்நடை வைத்திய அதிகாரி நாளை மேற்கொள்ளவுள்ளார்.


 சிகிச்சை முடிவடைந்ததும், இந்த ஆமையை மீண்டும் பாதுகாப்பாகக் கடலில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூங்கா அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.