( வி.ரி. சகாதேவராஜா)
அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில்போட்டியில் பா ஓதல் நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் சதுரிகனைப் பாராட்டி கௌரவிக்கும் விழா பாடசாலையில் அதிபர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பழையமாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவறஜனி உதயாகரன் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
விழாவில், சாதனை மாணவன் சதுரிகன் அவரது பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் புடைசூழ பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


Post a Comment
Post a Comment