பொல்கஹவெல பங்களாவத்த பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.
வனவிலங்குகளிடமிருந்து நிலத்தைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியிலிருந்து மின் பாய்ந்தமையினாலேயே இவ் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த நிலத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.webp)

Post a Comment
Post a Comment