40 இலட்சம் ரூபா பெறுமதியான கூரை தகடுகள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு




(க.கிஷாந்தன்)





மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் கீழ் இருந்த ஒரு தொகை கூரை தகடுகள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள குறித்த 7 தோட்டங்களில் (தலவாக்கலை, ஸ்டர்ஸ்பி, கவரவில, இன்வெரி, லொயினோல், டெரிக்கிளயார், கரோலினா) வாழும் மக்களின் பாவனைக்காக 40 இலட்சம் ரூபா பெறுமதியான கூரை தகடுகள் 01.12.2015 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் தலைவர் புத்தரசிகாமணி, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரண்ஸ், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.