மாத்தறையில் மூடுபனி காரணமாக போக்குவரத்தில் சிக்கல் நிலை
மாத்தறையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூடுபனியுடனான காலநிலை நிலவுகின்றது.
திஹதகொட, நாதுகல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பகுதிகளில் மூடுபனி நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சாரதிகள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

