'ஸீகாவுக்காக ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகாது' - பிரஸில்





ஸீகா வைரஸ் பரவலை உலகமட்ட சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், ரியோ நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்று பிரஸில் கூறியுள்ளது.
கொசுவின் மூலம் பரவும் இந்த வைரஸ் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஏற்பட்ட பிறவிக்குறைபாட்டுக்கு காரணமாகியுள்ளது.
முன்னர் நம்பப்பட்டதைதை விட இது மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.