கோதுமை மா விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு




(க.கிஷாந்தன்)

கோதுமை மாவின் விலை திடீரெனஅதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகமக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளதால் தோட்டநிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர்இதன்காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சூழ்நிலையில் திடீரென 7.20 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும்வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனதுஉணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

அத்தோடு இலகுவான முறையில் உணவுகளை தயாரித்துக்கொள்வதற்கு கோதுமை மா மிக முக்கியமானபங்கினை வகிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கும் இதேவேளை கோதுமை மாவை மானிய விலையில்வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு தற்போது கூட்டு ஒப்பந்தம்முடிந்து ஒரு வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்னும் தமக்கான சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்காமல்இவ்வாறான அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிப்பது நியாயமற்ற செயல்பாடு என இம்மக்கள்கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலகட்டத்தில் அரிசி மானிய விலையில் கொடுத்தபோதிலும் குறித்த திட்டம் மக்களை சென்றடையவில்லைஓர் இரு மாதங்களுக்கு மாத்திரமேவழங்கப்பட்டது.

இத்திட்டத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்தற்போது அதிகரித்துள்ள குடும்ப பொருளாதாரபிரச்சினையில் மற்றுமொரு பிரச்சினையாக மாவின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.

எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளதாரத்தை நலன் கருதி வரட்சிக்கான நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்பதோடு பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.