வாய்களை சேதப்படுத்திய வைத்தியருக்கு 8-ஆண்டு சிறை




'கொடூரமான பல் வைத்தியர்' என்ற பட்டப்பெயர் கொண்ட, நெதர்லாந்து பிரஜை ஒருவர், நோயாளிகளின் வாய்களை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸில் எட்டாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வலியை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்ததாகவும், நோயாளிகளின் காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக தேவையற்ற பல் பிடுங்கும் சிகிச்சைகளை நடத்தியதாகவும் ஜேகபஸ் வான் நியோரப் என்ற அந்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பல்வரிசைக்கு கம்பி கட்டச் சென்ற பெண்ணொருவருக்கு 8 பற்களை அவர் பிடுங்கியிருக்கிறார்.
அவர் பணியாற்றிய கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் அவர் மீது வழக்கை தொடர்ந்திருந்தனர்.