(க.கிஷாந்தன்)
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பலாங்கொடை மாரதென்ன தோட்ட தொழிலாளர்களுக்கு 50 வீடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சு ஊடாக மேற்கொள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 27.05.2016 அன்று அடிக்கல் நாட்டி வைத்தனர்.
இவ் வைபவத்தில் மலையக மக்கள் முன்னணயின் உபதலைவர் ரூபன் பெருமாள், ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதை படங்களில் காணலாம்.

