அரநாயக்க :தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு




கோகாலை அரநாயக்க பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்டுத்தருமாறு அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
அரநாயக்க மணிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 69 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் 27 பேரின் சடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன, 21 பேரின் உடற் பாகங்கள மாத்திரமே மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 21 பேரின் சடலங்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ள 131 பேரை தேடி தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.