மஹிந்தவுக்காக அரச ஊழியரை பணி நீக்கம் செய்ய முடியாது- ஆனந்த தேரர்



கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிற் சங்கத்தின் தலைவரை பணி நீக்கம் செய்ய அரசாங்கத்துக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என கூட்டு எதிர்க் கட்சிகளின் தொழிற்சங்க தலைவர் முருத்தெடுவே ஆனந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் கலந்துகொண்டதுதான் அவரது பணித் தடைக்கு காரணம் என்றால், அதனை ஏற்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபயராம விகாரையில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.