8848 மீற்றர் (29,029 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஜயந்தி கரு உத்தும்பொல இன்று சனிக்கிழமை அடைந்துள்ளார்.
மற்றொரு இலங்கையரான ஜொஹன் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மலையேறிகள், 4 வழிகாட்டிகள், 15 ஷேர்பா உதவியாளர்கள் கொண்ட குழுவொன்றில் ஓர் அங்கத்தவராக இணைந்து ஜயந்தி கரு உத்தும்பொல இப்பயணத்தை மேற்கொண்டார்.

