இந்த ஆண்டு வீதி விபத்துக்களில் வீழ்ச்சி



கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வீதி விபத்துக்கள் குறைந்திருப்பதாக வீதி பாதுகாப்பு சபை கூறியுள்ளது. 

விபத்துக்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்காக உரிய அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். 

தவறிழைக்கும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் கூறினார்.