நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ



கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கப்பல் ஒன்றின் கண்டெயினரில் ஏற்பட்ட திடீர் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

அத்துடன் குறித்த கப்பல் இந்தியா நோக்கி செல்லவிருந்த ஒன்று என தெரியவந்துள்ளது.