இலங்கை- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் குசால் பெரேரா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரேரா 32 ரன்கள் சேர்த்தார்.
3-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் சண்டிமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். மெண்டிஸ் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
சண்டிமால் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட அடுத்து வந்த கேப்டன் மேத்யூஸ் 51 பந்தில் 48 ரன்களும், அறிமுக வீரர் ஷனகா 19 பந்தில் 42 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
சண்டிமால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரின் 3-வது பந்தில் 3 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இவரது சதத்தால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இப்பிற்கு 303 ரன்கள் குவித்தது.
304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து தனது இன்னிங்ஸை தொடங்கியது.
32.3 ஓவர்கள் நிறைவில் 164 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை இழந்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதினால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு அயர்லாந்து அணிக்கு 293 ஓட்டங்கள் வெற்றி இலக்காக வழங்கப்பட்டது.
இதன்படி துடுப்பாடிய அயர்லாந்து அணி 40.4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 216 ஓட்டங்களை மட்டும் பெற்று 76 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.
இதன்போது தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய தசுன் சானக்க 43 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களை வீழ்த்தி இறிமுகப் போட்டியில் 5 விக்கட்களை வீழ்த்திய இலங்கையின் 3 ஆவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டார்.


Post a Comment
Post a Comment