பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரை பார்ப்பதற்காக மெகசின் சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று(23) சென்றிருந்தார்.
அரசியல்வாதிகளை சிறைப்படுத்த முடியும், ஆனால் மக்களின் எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது என இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
கைதுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளை பாரக்கவே நான் வந்தேன். மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்து சேறு பூசுவதே இவர்களது நோக்கம். பழிவாங்குவதை மட்டுமே இந்த அரசாங்கம் சிறப்பாகச் செய்கின்றது எனக் கூறியுள்ளார்.

