விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அத்துடன், விஞ்ஞான பீட மாணவர்களை, விடுதிகளிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மோதல் சம்பவத்தில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.