தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தும் கலந்துரையாடல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (22) முற்பகல் நடைபெற்றது.
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எம் சுஹைர் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

