#சவுதி : தூதரக அதிகாரிகள் அசமந்தம்



எட்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாது, உணவுக்கு எதுவுமின்றி சவுதி அரேபியாவில் அல்லலுறும் இலங்கையர்களை சந்திப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் தூதரக அதிகாரிகள் எடுக்கவில்லை என தகவல் பதிவாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் அல் – கொபார் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் சேவையாற்றிய வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் அங்கு பணியாற்றிய 12 இலங்கையர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.