#மூதூர்: முஸ்லிம்கள், புலிகளால் வெளியேற்றப்பட்ட 10 ஆண்டுகள்





இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள்.
2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது விடுதலைப்புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் பின்னர் அந்த பிரதேசம் பல மணித்தியாலங்கள் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.
ஓரிரு நாட்கள் இதே நிலை இருந்ததாக கூறப்படுகின்றது
அவ்வேளையில்தான் தங்களை வெளியெறுமாறு விடுதலைப்புலிகளினால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. .
இக்காலப்பகுதியில் இடம் பெற்ற எறிகணை வீச்சுக்களில் அகப்பட்டு 54 முஸ்லிம்கள் பலியானதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள் .
மூதூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை வெளியேறுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாக கூறுகின்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜே.எம் . லாஹீர்.
கினாந்திமுனை ஊடாக மட்டுமே வெளியேற அனுமதியை வழங்கியிருந்த நிலையில் அவ் வழியாக வெளியேறும் போது விடுதலைப்புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம்கள் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மக்கள் கைகளில் அகப்பட்ட பொருட்களுடனும் உடுத்த உடையுடனும் பல மைல் தொலைவிலுள்ள கந்தளாய் பகுதியை சென்றடைந்த மக்கள் ஒரிரு மாதங்கள் .அங்குள்ள நலன்புரி மையங்களில் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்