கொட்டாஞ்சேனை, பெனடிக் ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலிருந்து தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மூவரும் நஞ்சு பருகியிருக்கலாம் அல்லது நஞ்சூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

