வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்



வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நாளை முதல் கடமைக்குத் திரும்ப வேண்டும் என, அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது. 

நாளை கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கியவர்களாக கருதப்படுவார்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். 

அவரது கையெழுத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது என, பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒன்றிணைந்த குழு ஊடகப் பேச்சாளர் கே.எல்.டீ.ஜீ.ரிஜ்மன்ட் தெரிவித்துள்ளார்.