ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹிருனிகா பிரேமசந்திரவிற்கும் மேலும் எட்டு பேருக்கும் எதிராகவும் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தல், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

