(ஷமி.மண்டூர்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வைத்து வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் வான் உட்பட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டடிருந்தனர்.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வி முன்நிலையில் செவ்வாய்கிழமை ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி மண்டூர் தம்பலவத்தை பிரதேசத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் பல்கலைகழக மாணவி கடத்தப்பட்ட நிலையில் சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

