அண்மையில் தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர், தலைமன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குறுந்தீவுகளைப் பார்வையிட்டதுடன், அங்கு காணப்படக்கூடிய அரிய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் மன்னாரின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினர்.

