விளக்கமறியலில் மகிந்தானந்த



முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அலுத்கமகேவை இந்த மாதம் 22 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மகிந்தானந்த அலுத்கமகே இன்று காலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பு 07, Kynsey வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை கிரிஸ்டோபர் ரொசான் என்ற பெயரில் ரூபா 27 மில்லியனுக்கு கொள்வனவு செய்த குற்றம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.