அரச கருமமொழிகள் தேர்ச்சி எழுத்துமூல பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது


இன்றைய தினம் நடைபெறவிருந்த அரச கருமமொழிகள் தேர்ச்சி எழுத்துமூல பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்கான திகதி தொடர்பில் சகல பரீட்சார்த்திகளுக்கும் விரைவில் அறிவிக்கப்படும் என அறிக்கையொன்றின் ஊடாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.
அரச கருமமொழிகள் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.