இலங்கையை வெளுத்துக் கட்டிய அவுஸ்திரேலிய அணி



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

இதன்படி சற்று முன்னர் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த அந்த அணி 195 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது. 

இதற்கமைய 196 என்ற இலகுவான இலக்கு அவுஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா  43 ஓவர்களில் 199/5 பெற்று ஐந்து விக்கெற்றுக்களால் வெற்றியினைத் தனதாக்கி  இத் தொடரைக் கைப்பற்றியது.