மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் 2016 ஆம் ஆண்டு நிதி வருடத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியினால் இதன் போது ஆராயப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அமைச்சுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களையும் வருட இறுதிக்குள் உரிய திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு இங்கு ஜனாதிபதியினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்ட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

