ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்



இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

அணித் தலைவர் மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், குஷல் ஜனித் பெரேரா மற்றும் லகிரு திரிமானே உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

முன்னதாக குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் குறைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.