சீ.எஸ்.என். இரத்து



யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசையின் அனுமதிப்பத்திரம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்யப்படுவதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2011.03.03 ஆம் திகதி சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசைக்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டதுடன் இந்த அனுமதிப்பத்திரம் தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படுவதாக குறித்த தொலைக்காட்சியின் தலைவர் ரொஹான் வெலிவிட்டவுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாக ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.