(க.கிஷாந்தன்)
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக நானுஓயா பொரிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் 24.10.2016 அன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ பகுதியில் இவ்வாறு குறித்த பஸ் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வழமைபோல் பஸ் நானுஓயா நகரத்தில் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கும் பொலிஸார் 24.10.2016 அன்று அதிகாலை 1.30 மணியளவில் நகரத்தில் இருந்து சம்பவம் நடத்த இடத்திற்கு இனந்தெரியாதவர்களால் கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு குறித்த பஸ் சாரதியை தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா குற்ற பரிசீலனை பிரிவினரும், நானுஓயா பொலிஸாரும் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

