கூட்டு எதிர்க் கட்சியின் இரத்தினபுரிக் கூட்டம்




கூட்டு எதிர்க் கட்சியின் இரத்தினபுரிக் கூட்டம்  ஆரம்பமாகியுள்ளது
போராட்டத்துக்கு உயிர் கொடுக்கும் புதிய மக்கள் சக்தி எனும் தொனிப் பொருளில் இன்றைய கூட்டம் நடைறுகின்றது.
இந்த அரசாங்கத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிறுத்துதல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவதை நிறுத்துதல் என்பன இக்கூட்டத்தின் செய்தியாக மக்களுக்கு சென்றடையவுள்ளன.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வந்தடைந்தார்.