மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் 63 வந்து மதிக்கத்தக்க அழகேந்திர ராஜா எனும் மீனவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் மீன் பிடிக்க சென்றவரை காணவில்லையென தேடியதன் பிற்பாடே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மீன்பிடி தினைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்ன உப்போடையை சேர்ந்தவர் ஆவார்.

