தத்தளிக்கிறது கார்



நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாக இருக்கின்ற, நீர்த்தடாகத்துக்குள் காரொன்று விழுந்துவிட்டது. அக்கார் அரைவாசி மட்டுமே மூழ்கியுள்ளது. கடும் மழை பெய்துகொண்டிருப்பதனால், அக்காரை மீட்டெடுப்பதில் பாதுகாப்பு தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற அரும்பொருட்காட்சியத்தின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாகன​மே, இவ்வாறு நீர்த்தடாகத்துக்குள் விழுந்துள்ளது.பணிப்பாளர் நாயகத்தை நாடாளுமன்ற வளாகத்தில் இறக்கி விட்டு, திரும்பிச் செல்லும் போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நீர்த்தடாகம் ஆழம் குறைந்தது என்பதனால் எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை