நிந்தவூரில் சிவப்பு அறிவித்தல்



நிந்தவூரில்; நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 70  பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.அப்துல் மஜீட், நேற்று (29) தெரிவித்தார்.
மேற்படி பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக பொதுச் சுகாதாரப்  பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை மேற்கொண்டனர். இதன்போதே 70 பேருக்கு  சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.  
இவர்கள் தங்களின் சுற்றுச்சூழலை 14 நாட்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டும் என்பதுடன், தவறும் பட்சத்தில் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிப்பு